செய்திகள்









   நயன்தாராவுக்கு எதிராக போராடும் பெண்கள் சங்கம்





பிரபுதேவா  நயன்தாராவின் காதல், திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர்களது காதலால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் தனது இரு குழந்தைகளுடன் கலங்கிப் போய் நிற்கிறார்.
இந்நிலையில் பிரபுதேவா தொடர்பை முறிக்காவிட்டால் நயன்தாராவுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம் என்று ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவி கல்பனா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது,

பிரபுதேவாவும் ரமலத்தும் குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு நயன்தாரா கேடு செய்வது நல்லதல்ல. நயன்தாரா தவறு செய்கிறார்.

நயன்தாரா பெரிய நடிகை வேறு நல்ல வாழ்க்கையை அவர் அமைத்துக் கொள்ளலாம். ஒரு குடும்ப பெண் கண்ணீர் சிந்த காரணமாக இருக்ககூடாது.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நமது கலாச்சாரம். நாம் வெளிநாட்டில் வாழவில்லை. தமிழ்நாட்டில் வசிக்கிறோம். இங்குள்ள பண்பாட்டைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

நடிகர் நடிகைகளுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழவேண்டும். ஒரு நடிகரோ, நடிகையோ தவறு செய்தால் ரசிகர்களையும் அது பாதிக்கும். நடிகர், நடிகையை போல் நாமும் ஏன் வாழக்கூடாது என்று எண்ணத் தோன்றும்.

திரையுலகம் மீது ஏற்கனவே சில அவப்பெயர்கள் இருந்தன. அவை இப்போது மாறி நல்ல பெயர் வந்து கொண்டிருக்கிறது. நயன்தாரா செயல்களால் மீண்டும் அவதூறு வந்துவிடக்கூடாது.

நயன்தாரா உடனடியாக மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு முன் என்ன நடந்திருந்தாலும் இருக்கட்டும். இனிமேல் வேண்டாம். தவறை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.

ரமலத் பிரச்சினை தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்களின் பிரச்சினையாக இப்போது மாறிவிட்டது. அவருக்கு பக்கத்துணையாக இருக்க எல்லா மகளிர் அமைப்புகளும் முடிவு செய்துவிட்டன.

எனவே பிரபுதேவாவுடன் தொடர்பு இல்லை என்று நயன்தாரா பகிரங்கமாக அறிவிப்பு. வெளியிட வேண்டும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று இனியும் நழுவக்கூடாது.

பிரபுதேவா தொடர்பை முறிக்காவிட்டால் நயன்தாராவுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம். அவர் நடித்த படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம். தமிழ்நாடு முழுவதும் நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்னால் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றார்.






நடிகர் விஜய் – அஜித் சேரும் புதிய படம்






ajithசமீபகாலமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாறிவரும் சினிமா பிரபலங்கள் பட்டியல் நீண்டுகொண்டு வருகிறது. தற்போது கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தயாரிப்பாளர்களாக மாறியுள்ளனர். ஆர்யாகூட தனது தயாரிப்பில் ‘படித்துரை’ என்னும் படத்தை தயாரித்து முடித்துள்ளார்.
இந்த வரிசையில் ஹைலைட்டாக ஒரு முக்கியமான ‘தல’ தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளது.
சினிமாவில் தனித் தன்மையுடனும், தனி தன்மையுடனும் ( எந்தவித பெரிய சினிமா ஆதரவும் இல்லாமல்) முன்னணி நடிகனாக (’தல’யாக) விளங்குகிறார் அஜித். தனது 50 வது படத்தின் மும்முரத்தில் இருக்கும் இந்த நேரத்திலும் ஒரு படத்தை தயாரிக்க முடிவெடித்துள்ளாராம்.
“ நான் சினிமாவை நேசிக்கும் கலைஞன். அதனால்தான் சினிமாவில் சம்பாதித்ததை, சினிமாவின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்துகிறேன்” என்பார் கமல்.
அதே பாணியில், தற்போது அஜித் தயா‌ரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் “குட்வில் எ‌ண்டர்டெய்ன்மெண்ட்”.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார் அஜித். தற்போது தனது நிறுவனத்திற்காக கதை கேட்டும் வருகிறாராம்.
இது பற்றி குறிப்பிடும் போது ‘எனது நண்பர்களுக்கும் ‘குட்வில்’லில் வாய்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார் அஜீத். அப்போது அவரிடம், விஜய்யை வைத்து படம் எடுப்பீர்களா…? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “நிச்சயமாக… விஜய் எனது சிறந்த நண்பர். அவரை வைத்து படம் பண்ணும் எண்ணம் எனக்கு உண்டு” என நட்பின் மிகுதியுடன் பதிலளித்தார் அஜீத்.

               ஏலம் விடப்படும் எந்திரன் உடைகள்!


மகன் திருமணம்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முக அழகிரி நேரில் அழைப்பு!
கன் திருமணத்துக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேரில் திருமண அழைப்பு வைத்தார் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக அழகிரி.
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி -அனுஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 18-ம் தேதி சென்னையில் நடந்தது. இருவரின் திருமணமும் வரும் நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. மதுரையில் மிகப் பிரமாண்டமாய் நடக்கும் இந்த திருமணத்தைத் தொடர்ந்து நவம்பர் 20 ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழை அமைச்சர் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் விஐபிக்களுக்கு நேரில் வழங்கி வருகின்றனர்.
திரையுலகில் முதல் பத்திரிகையை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சனிக்கிழமை காலை நேரில் வழங்கினார் முக அழகிரி. அவருடன் அவரது மனைவி காந்தி, மகள் மற்றும் மருமகன் சென்றிருந்தனர். ரஜினியும் அவரது மனைவி லதா ரஜினியும் அழகிரி குடும்பத்தினரை வரவேற்று, அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் முக அழகிரி.
ஏலம் விடப்படும் எந்திரன் உடைகள்!
ஹாலிவுட்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஹீரோ ஹீரோயின்கள் பயன்படுத்திய உடைகளை ஏலம் விடுவது வழக்கம். அவை மிகப் பெரிய விலைக்கு ஏலம் போய் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்.
தமிழில் எந்திரன் என்ற ஹாலிவுட் படத்தைக் கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், இப்போது எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் பயன்படுத்திய உடைகளை ஏலம் விடுகிறது. சர்வதேச அளவில் யார் வேண்டுமானாலும் ஏலம் கேட்கலாம்.
இந்தியப் படம் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட உடைகளை ஏலம் விடுவது இதுவே முதல் முறை. எந்திரனுக்கு உலக அளவில் கிடைத்துள்ள வரவேற்பும் வெற்றியுமே இந்த ஏல முயற்சிக்கு காரணமாக அமைந்தது என சன் பிக்சர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தின் மூலம் இந்த ஏலம் நடக்கும் என்றும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
பாட்ஷா -2 டிஸ்கஷனில் ரஜினி!
ழக்கமாக 20 நாட்களாவது இமயத்தில் தங்கியிருக்கும் ரஜினி இந்த முறை எட்டே நாட்களில் சென்னை திரும்பிவிட்டார். ஆனால் முன்னிலும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் அவர் திரைப்பட வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகுக்கே ஆனந்த ஆதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஜினிக்காக இளம் இயக்குநர்கள் சிலர் வெயிட்டான கதைகளை ரஜினிக்காக தயார் செய்யத் துவங்கியுள்ளனர். கல்வீசுவோம், ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
இவர்களில் சிலர் தைரியமாக போயஸ் கார்டனுக்கே போன் போட்டு விஷயத்தைச் சொல்லி ரஜினியின் அப்பாயின்ட்மெண்ட் கேட்க, “உங்கள் விவரம், தொலைபேசி எண்களைக் கொடுங்கள். குறிப்பிட்ட நாளில் சாரே உங்களைத் தொடர்பு கொண்டு எப்போது வரவேண்டும் என்று சொல்வார்” என்று பதில் வருகிறதாம்.
இதற்கிடையே, தனது அடுத்த படமான பாட்ஷா 2 -ன் கதை விவாதங்களில் நேரடியாகப் பங்கேற்றுள்ளார் ரஜினி. எனவே விரைவில் பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது ரசிகர்களுக்கு. இதைவிட முக்கியமாய், ரசிகர்களுக்கு தரப்படுவதாக அறிவிக்கப்பட்ட விருந்துக்கான ஏற்பாடுகள் பலமாக நடக்கத் துவங்கியுள்ளதாக மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி பற்றிய கட்டுரை… அமெரிக்கப் பத்திரிகையிடம் மன்னிப்பு கேட்ட இந்தியா டுடே!

ரஜினி பற்றிய கட்டுரை… அமெரிக்கப் பத்திரிகையிடம் மன்னிப்பு கேட்ட இந்தியா டுடே!


2001 தமிழக சட்டமன்ற தேர்தல் நேரம்….
அன்றைக்கு தமிழக தேர்தல்இறுதிக் கட்ட நிலவரம் குறித்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார், இந்தியா டுடே (தமிழ்) பொறுப்பாசிரியர்.
வேறு ஒரு பத்திரிகையின் தலைமைப் பொறுப்பாசிரியராக இருந்த நான், 20 தொகுதிகளில் பயணம் செய்து, ‘அலையில்லாத இந்தத் தேர்தலில் திமுக மூழ்கிப் போவது உறுதி’ என்ற கட்டுரையைத் தந்திருந்தேன்.
அதாவது எல்லோரும் திமுக ஜெயிக்கும் என்று கூறிவந்த சூழலில், அதிமுக ஜெயிக்கும் என்று சொன்னது என்னைப் போல ஓரிருவர்தான். கட்டுரைக்கு சம்பளம் எதையும் பெறவில்லை. நட்பு அடிப்படையில் தரப்பட்டது. ஆனால் அந்தக் கட்டுரை வெளியாகவில்லை!
அதே நேரம், வேறு தலைப்பில் அந்த இதழ் பொறுப்பாசிரியர் வெளியிட்ட கட்டுரையில், நான் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் இடம்பெற்றிருந்தன. அதன் பிறகு அவருடன் பேசுவதைக் கூட நிறுத்திவிட்டேன் என்பது வேறுவிஷயம்.
ஆனால் எல்லோரும் இதே போல இருந்துவிடுவார்களா என்ன… ஒரு அமெரிக்க ஆன்லைன் பத்திரிகையில் ரஜினி பற்றிய ஒரு கட்டுரையை, இந்தியா டுடே அப்படியே எடுத்தாள, வெளுத்துவிட்டார்கள். முதன்மை ஆசிரியரான அருண் பூரி மன்னிப்பு கேட்டும்கூட விடவில்லை.
ஏற்கெனவே பல முறை இந்தியா டுடே கட்டுரைகளின் அசல் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் கூட வட இந்திய பத்திரிகையாளர் நிரஞ்சனா, தனது கட்டுரையை இந்தியா டுடேயின் டெபுடி எடிட்டர் தமயந்தி தத்தா  காப்பியடித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
ரஜினி விஷயத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குத்துவது இந்தியா டுடே ஸ்டைல்.
நடுநிலை என்ற பெயரில், திட்டுகிறார்களா, பாராட்டுகிறார்களா என்றே தெரியாத அளவுக்கு மையமாக கட்டுரை எழுதுவது அவர்கள் பாணி. பாபா சமயத்தில் கடுமையான விமர்சனம், சந்திரமுகி நேரத்தில் பாராட்டு, மீண்டும் குசேலன் சமயத்தில் காலை வாரிவிடுதல், எந்திரன் சமயத்தில் சிறப்புக் கட்டுரை, அவ்வப்போது சக்திமிக்க 50 இந்தியரில் ஒருவர் ரஜினி என்ற பட்டியல்… இதுதான் ரஜினி விஷயத்தில் இந்தியா டுடே பார்முலா. ஆனால் அவர் கண்டு கொள்வதில்லை.
அமெரிக்கக் கட்டுரையை இந்தியா டுடே எடிட்டர் இன் சீப் காப்பியடித்தது மற்றும் அதைத் தொடர்ந்து அருண் பூரி மன்னிப்பு கேட்டது ஆகியவை  தொடர்பாக எழுந்த பிரச்சினை குறித்து  பெருமளவில் இப்போது வட இந்தியா மீடியாவில் விவாதம் கிளம்பியுள்ளது.
இதுபற்றி தட்ஸ்தமிழில் வெளியாகியுள்ள கட்டுரையை அப்படியே தருகிறோம்:
எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்” என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.
கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது:
“ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லிருந்தே சொந்தமாகப் படங்கள் தயாரித்து, இயக்கி, நடித்து வரும் அவர், ரஷ் ஹவர், கராத்தே கிட் என பல ஹாலிவுட் படங்களின் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்.
ஆனால் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இரண்டாவது இடம் யாருக்கு என்று உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாது. வழுக்கை விழுந்த தலை, நடுத்தர வயது கொண்ட அவர் இந்தியாவின் தமிழ்நாடு என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த ரஜினிகாந்த் வெறும் நடிகரில்லை. எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாத ஒரு இயற்கைச் சக்தி மாதிரி. புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம் (If a tiger had sex with a tornado and then their tiger-nado baby got married to an earthquake, their offspring would be Rajinikanth!). அதாவது அவரது படங்களில் குறிப்பிடப்படுவது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
இதுவரை உங்களுக்கு இவரைத் தெரியவில்லை என்றால், வரும் அக்டோபர் 1-ம் தேதி தெரிந்து கொள்வீர்கள். அன்றுதான் அவரது எந்திரன் படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் இதுவரை தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் உருவானது எந்திரன்தான். இரண்டாயிரம் பிரிண்டுகளுக்கும் மேல் ஒரே நேரத்தில் வெளியீகிறது. இந்த செலவுக்குக் காரணம்
சண்டைக்கு யூவான் வோ-பிங் (The Matrix), அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ (Jurrassic Park), ஸ்பெஷல் எபக்ட்ஸுக்கு ஜார்ஜ் லூகாஸ், இசைக்கு ஏ.ஆர். ரஹ்மான் (Slumdlog Millionaire) என பல ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், இந்த கலைஞர்கள், இவ்வளவு பட்ஜெட் எல்லாவற்றையும் மீறி இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என அதன் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பக் காரணம், இது ரஜினிகாந்த் படம் என்பதால் மட்டுமே!”
-இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை, ரஜினியின் சிறப்புகள், அவர் செய்யும் நல்ல காரியங்கள், அவருக்கும் பாலிவுட் பிரபலங்களுக்கும் உள்ள வேற்றுமைகள், அவரது இயல்பான யதார்த்த வாழ்க்கை என பல அம்சங்களையும் அலசுகிறது. இரண்டு பக்கத்துக்குப் போகிறது.
இந்தக் கட்டுரையில் மேலே நீங்கள் பார்த்த ஆரம்ப வரிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார் இந்தியா டுடே இதழின் எடிட்டர் – இன்- சீஃப் அருண் பூரி.
ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் இந்தக் கட்டுரை வெளியாகிவிட்டது. அடுத்த நாளே, இந்தக் கட்டுரையின் முதல் பகுதி ஸ்லேட் வெளியிட்ட கட்டுரையின் அப்பட்டமான காப்பி என்பது தெரிந்துவிட, உடனடியாக ஸ்லேட் பத்திரிகைக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியிருந்தார் அருண் பூரி. இந்தியா டுடேயின் அடுத்த இதழில் ஒரு விளக்கமும் வெளியிட்டார்.
“தென்னக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் டெல்லியில் உள்ள பணியாளர்களிடம் சில கருத்துக்கள் கேட்டேன். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களில் துரதிருஷ்டவசமாக வேறு ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகள் என்னுடைய கட்டுரையில் இடம்பெற்றுவிட்டன. எப்படி இருந்தாலும் மன்னிப்பு சரியான விளக்கமாகாது. என் தவறுதான். வருத்தங்கள்”, என குறிப்பிட்டிருந்தார்.
ஒரிஜினல் கட்டுரையை எழுதிய ஹென்ட்ரிக்ஸுக்கும் மன்னிப்புக் கடிதம் அனுப்பினார்.
அதில், “உங்கள் கட்டுரையின் ஒரு பகுதி எனது தலையங்க கட்டுரையில் கவனக்குறைவாக இடம்பெற்றுவிட்டதற்கு, எங்கள் வாசகர்களிடம் நாங்கள் வருத்தம் தெரிவத்தை கட்டாயம் அறிந்திருப்பீர்கள். உங்களிடமும் என் வருத்ததை தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் ஆசிரியருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த மன்னிப்பை ஏற்காத ஹென்ட்ரிக்ஸ், “நடந்த தவறுக்கு வருந்தும் எண்ணம் ஏதும் அருண் பூரிக்கு இல்லை என்றும் தனது தவறை மறைக்க சப்பைக் காரணம் கண்டுபிடித்துச் சொல்கிறார்” என்றும் கூறியுள்ளார்.
“இந்தியா டுடே பத்திரிகை ரஜினியைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளது. இந்தியாவின் முதல் 50 சக்தி மிக்க மனிதர்களின் பட்டியலில் ரஜினிக்கும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இடமளித்து வருகிறது. இப்படிப்பட்டவரைப் பற்றி தெரியாது என இந்தியா டுடேயின் நிறுவனர், முதன்மை ஆசிரியரான அருண் பூரி கூறுவது வியப்பை அளிக்கிறது. தனக்கு சரியாகத் தெரியாத ஒருவரையா இந்தியாவின் சக்தி மிக்க மனிதராக அந்தப் பத்திரிகை பட்டியலிட்டது.. தனக்குத் தெரியாத மனிதரைப் பற்றியா சிறப்புக் கட்டுரைகள் வெளியிடுகிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்!


தாய்வானில் புதிய எந்திரன்---- இது புதுசு


மனிதனுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தரும் விதத்தில் ரோபோ செயற்பாட்டை துரிதப்படுத்த விஞ்ஞான உலகம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரொபோ கட்டமைப்புக்களில் வளர்ச்சியின் முக்கிய ஒரு படிநிலையை தேசிய தாய்வான் பல்கலைக்கழகம் ஆராந்து வெற்றி பெற்றிருக்கிறது.

தாய்வான் தலைநகர் தாய்பேயில் சர்வதேச ரோபோ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு மாணவர்கள் உருவாக்கியுள்ள ரோபோ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காரணம் சாதரண மனிதனின் அனைத்து உணர்ச்சிகளையும் தனது முக பாவத்தில் இவ் ரோபோ காட்டுகிறது.
சிரிப்பு, அழுகை, கோபம், ஏமாறம் என மனிதனை விட மிகத்துல்லியமான முக அசைவுகளை இவ் ரொபோ கொண்டுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற காமிக் இசைக்குழுவான ஹரி என்பீல்ட் மற்றும் பவுல் வைட் ஹவுஸ் உருவங்களில் உருவாக்கப்பட்ட இவ் ரோபோவுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

TIROS என அழைக்கப்படும் இவ் ரோபோ கண்காட்சியில் 60 தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கிய சுமார் 300 ற்கும் மேற்பட்ட ரொபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  ஒத்த அச்சைவில் நடனமாடும் ரொபோ குழு, நோயில் படுத்திருப்பவர்களுக்கு, சரியான நேரத்தில் மருந்துகள் கொடுக்கும் ரோபோக்கள் என  பல தொழில் செய்யும் ரோபோக்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரொபோக்கள் ஒரு விரலால் தான் பியானோ வாசிக்கும். ஆனால் முதற்தடவையாக தனது 10 விரலால் பியானோ வாசிக்கும் ரொபோவும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

TRIOS ரொபோ கண்காட்சி ஒழுங்கு குழுவினரின் துணைத்தலைவர் வின்செண்ட் சியெவ் தெரிவிக்கையில், 2010 ஐ ரொபோக்களின் வருடமாக அறிவித்திருக்கிறோம். அதன்படி பல்வேறு புதிய ரொபோக்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப உலகில் இவற்றின் பாவணையை அதிகரிப்பதன் மூலம் தாய்வானுக்கு இந்த வருடத்தில் ட்ரில்லியன் டாலர்கள் பணப்புழக்கத்தில் இருக்கும் என்றார்


வம்சம்
 
Trisha & Asin saving Arulnidhi's Vamsam from disaster?
Arulnidhi’s debut film Vamsam has been appreciated by the family audiences, especially in B & C stations.

The city audiences were critical of the film’s length in the second half, mainly the long drawn out temple festival scenes.

After a brainstorming session, Arulnidhi and director Pandiraj have trimmed 10 minutes of the film in the second half. They agreed to the industry and audience feedback that “the first half moves like a superfast express train, while the second half is like a passenger train”.

The trade feels that Vamsam will now do better. It has already been declared a hit in rural areas, as the “look and feel” is appealing, thanks to the comedy scenes of “Asin the cow” and “Trisha the cat”!

The latest we hear is that Pandiraj and his lead actors Arulnidhi, Sunanya and Ganjakarupu are going on a ‘after release promotional tour’ of Tamil Nadu


 Tamil actors Suriya & Karthi threatens Telugu actors


Telugu cinema industry will witness the influx of Tamil heroes in tollywood directly. The decision to act in straight Telugu movies is said to be the latest aim of many young Tamil heroes. For this reason, they are willing to entertain the Telugu cinema directors, who come up with worthy scripts.












With the Telugu cinema heroes demanding high remunerations and high investments, there is news that the directors are willing to bring in some Tamil film heroes into tollywood. Factually speaking, Telugu cinema heroes like Pawan Kalyan, Mahesh babu, Nagarjuna, Ram Charan, involve in direction department and try to finger in the script, for showing their celebrity value.

In Tamil films, except, Kamal Hassan and Simbhu no hero is given a chance to involve in the direction. Tamil stars like Surya, Karthi, and Silambarasan are interested in signing Tollywood films in this year and already Tamil star brother’s actor Surya and actor Karthi have signed direct Telugu films recently. Karthi will be working with director Bomarillu bhasker in a project, which will have music director Devi Sri Prasad’s music. Surya will work with new director Vikas reddy and the project will be on floors from early next year and is likely to be produced by Bellam Konda Suresh

So, if in case the Tamil stars start working in telugu films, then the tollywood heroes will definitely feel the heat







           Vijay rejected Nayanthara!















Actress Nayanthara has been one of the top-charting actress of past couple of years and went down suddenly with a below average performance in her career graph. It was all due to her personal problems and now the actress is trying to make a great comeback in Kollywood.

The actress has pinned all her hopes on upcoming Tamil release ‘Boss Engira Bhaskaran’ that features Arya in lead role. The actress believes that her role will be completely impressive and has more probabilities of winning her great offers.

And then, there’s interesting news about the actress that is trying to perform the role of Kareena Kapoor in the Tamil remake of Vijay’s ‘3 Idiots’. The actress is also preparing herself to look fit for the role even before the offer could approach her.

But, it looks like Vijay isn’t interested over pairing with her due to the controversies, she has been bounded to.


                    


இலங்கைபோனஆசினுக்குராதாரவி,   சத்யராஜ் மட்டும் கண்டனம்

                                                      http://thatstamil.oneindia.in/img/2010/07/25-asin200.jpg
இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் இலங்கைக்குப் படப்பிடிப்புக்குப் போயுள்ள நடிகை ஆசினுக்கு கண்டனம் தெரிவித்து ராதாரவியும், சத்யராஜும் மட்டும் பேசினார்கள்.

ராதாரவி பேசுகையில், இலங்கைக்கு நடிகர்- நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும்.

அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார். அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். இனிமேல் இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்றார்.

சத்யராஜ் பேசுகையில், அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது.

இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர்-நடிகைகள் செல்லக் கூடாது. நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். கருணாசை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம். அங்கு தனித்தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன். நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம் என்றார் அவர்



ஆசின் மீது நடவடிக்கை உறுதி-ராதாரவி ஆவேசம்
         






























    http://thatstamil.oneindia.in/img/2010/07/13-asin-lanka-200.jpg
தொடர்ந்து நடிகர் சங்க தடைகளை மீறி வரும் நடிகை ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி. ஓரிரு நாட்களில் முடிவெடுத்து அறிவிப்போம் என்று தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவை ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமும் புறக்கணித்தது. தென்னிந்திய திரையுலகம் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்தித் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய நடிகர், நடிகைகள் போகவில்லை.

சல்மான் கான் போன்ற ஒருசிலர் மட்டுமே சென்றனர்.இதனால் கொழும்புப் படவிழா பிசுபிசுத்துப் போனது.

இந்தப் பட விழாவுக்குப் போனவர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக தென்னிந்தியத் திரையுலக கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால் இந்தத்தடையை மீறி தற்போது நடிகை ஆசின், சல்மான் கானுடன் இலங்கையில் முகாமிட்டுள்ளார்.

ரெடி என்ற இந்திப் பட ஷூட்டிங்கை வேண்டும் என்றே கொழும்பில் வைத்துக் கொண்டுள்ள சல்மான் கானுடன் சேர்ந்து நடித்துவருகிறார். இதனால் தமிழ்த் திரையுலகினர் கொதிப்படைந்துள்ளனர். ஆசினுக்கு தடை விதிக்கப்படும், எப்படி அவர் தமிழ் சினிமாவில் நடித்து விடுவார் என்று தமிழ்த்திரையுலகினர் கூறி வருகின்றனர்.

ஆனால் எத்தனையோ இந்தியர்கள் கொழும்பு போகிறார்கள்,கிரிக்கெட் வீரர்கள் போகிறார்கள், சென்னையிலிருந்து விமானம் போகிறது, நான் போகக் கூடாதா என்று கேட்டு திரையுலகினரை கொதிப்படைய வைத்துள்ளார் ஆசின்.

இந்த நிலையில் படப்பிடிப்பு போக வேறு வேலைகளிலும் ஆசின் ஈடுபட ஆரம்பித்துள்ளார். வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு ராஜபக்சே மனைவி ஷிராந்தியுடன் சேர்ந்து டூர் அடித்துள்ளார் ஆசின். அவரை தமிழர்களுக்கான வீட்டு வசதித்திட்டத்தின் பிராண்ட்அம்பாசடராக இலங்கை அரசு நியமிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தென்னிந்தியத் திரையுலகினர் மேலும்கோபமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராதாரவி கூறுகையில், ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் ஏற்கனவே கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் காரணமாக, அசின் மீதான நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து விட்டது. எனவே ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்போம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றார்.

ஆனால் ஆசின் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.





எங்கு போவது என்பது எங்களது உரிமை-யாரும் மிரட்டக் கூடாது: நடிகர் சங்கம்
                                                           http://thatstamil.oneindia.in/img/2010/07/25-nadigar-sangam-meeting200.jpg


கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது.

அப்படிப் போன நடிகர் நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசப்பட்டது. நடிகை ஆசின் இலங்கை போனதை கடுமையாக கண்டித்திருந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவியும், ஆசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று நடிகர் சங்கம் அப்படியே நேர் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளது.

நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் அரங்கத்தில் கூடியது.

காலை 10 மணிக்குத் தொடங்கியது. சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் கூடியது. கூட்டத்தில் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் சத்யராஜ், சூர்யா, முரளி, சார்லி, எஸ்.வி.சேகர், கே.ராஜன், சத்யப்ரியா, குயிலி, இணை செயலாளர்கள் கே.ஆர்.செல்வராஜ், அலெக்ஸ், கே.என்.காளை உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

- இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

- இலங்கையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் நாம் அறிவோம். தற்போது அங்குள்ள நம் தமிழர்களின் நிலையையும் அறிவோம். அவர்களின் பிரச்சினைகள் தீர மறு வாழ்வு திட்டத்திற்கு நம்மாலான உதவிகளை மனப்பூர்வமாகவும், பொருள் ரீதியாகவும் செய்து வருகிறோம்.

ஆயினும் சமீப காலமாக நம் கலைஞர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதும் பத்திரிகை வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

எங்களது கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்கிற முடிவை கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவெடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள்.

- திரைப்படங்களில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்கள் பெரும் தொழிலாளர்களை திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சார்ந்தவர்கள் லாப நஷ்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்க முடியாது.

- திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினரான பிறகே தமிழ் திரைப் படங்களில் நடிக்க முடியும். உறுப்பினர்கள் ஆகாத நடிகர்கள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் உறுப்பிர்கள் ஆக வேண்டும். இல்லையெனில் உறுப்பினர் அல்லாத கலைஞர்களுடன் நமது உறுப்பினர்கள் பணி புரிய மாட்டார்கள்.

- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதர, சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

- நடிகர்கள், தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது

கொழும்புப் பட விழாவுக்கு எந்த தமிழ் நடிகர், நடிகையும் போகாமல் கடும் சிரத்தையுடன் பார்த்துக் கொண்ட நடிகர் சங்கம் தற்போது யார் போனாலும் அதைத் தடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தப்பினார் ஆசின்!

நடிகர் சங்கத்தின் இன்றைய தீர்மானத்தைப் பார்க்கும்போது இலங்கை போனதற்காக பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நடிகை ஆசின் மீது எந்தவித தூசியோ, தும்போ படாத வகையில் அவர் பத்திரமாக பாதுகாக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

பரிதாபத்துக்குரிய பாலிவுட் கலைஞர்கள்!

கொழும்பு பட விழாவுக்குப் போகக் கூடாது என்று கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்ட பாலிவுட் திரையுலகினர் தற்போதைய நடிகர் சங்க தீர்மானத்தின் மூலம் பெரும் கோமாளிகளாக்கப்பட்டுள்ளனர்.

அமிதாப் பச்சன் முதல் சிறிய நடிகர், நடிகர் வரை பலரும் இந்த விழாவுக்குப் போகாமல் புறக்கணித்தனர். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்துதான் அமிதாப் உள்ளிட்டோர் போகாமல் இருந்தனர்.

ஆனால் இப்போது நடிகர், நடிகையர் யாரும் இலங்கைக்குப் போவதை தடுக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற தீர்மானத்தையோ, அறிவிப்பையோ, கொழும்புப் பட விழா பிரச்சினையின்போது ஏன் நடிகர் சங்கம் நிறைவேற்றவில்லை என்பது புரியவில்லை.

இலங்கைக்கு எதிராக இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் கடுமையாக போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை கவனிப்புக்குரியதாகியுள்ளது. மேலும், நடிகர் கருணாஸ், நாம் தமிழர் அமைப்புக்கு எதிராக புகார் கூறியுள்ள நிலையில், தற்போதைய நடிகர் சங்க முடிவு, முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெரிகிறது



                                       Asin invites Dhoni n Sakshi for dinner



                                                                      Asin invites Dhoni n Sakshi for dinner
South Indian star Asin is in the news, for meeting her lover Dhoni in a Sri Lankan hotel. But here is special news from the close sources to Indian cricket captain Mahindra Singh Dhoni. Asin is on a shootings schedule with Salman Khan and at the same time Dhoni and his wife Sakshi Singh Rawat are also residing in the same hotel, where Asin is staying.
A couple of days back, Asin met Dhoni, incidentally. The news spread like a wild fire in India. Now, there is news that Asin invited Sakshi and Dhoni for dinner on this weekend and Salman Khan will join them for sweet time. as soon as this news spread in the media, the shutter bugs are eagerly waiting to catch the glimpse of Dhoni in between two women, who love her to the core.