டூரஜினியின் ராணா - பூஜை முடிந்து ஃபாரினில் யட்!




சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் பூஜை ஏப்ரல் 20-ம் தேதி நடந்தது. எந்திரனுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்டமான வரலாற்றுப் படம் ராணா. கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் ரவிக்குமாரும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ராணாவின் கதை, திரைக்கதையை ரஜினியே எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஈராஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சௌந்தர்யா ரஜினியின் ஹரா பிக்ஸர்ஸும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்துக்கு டெக்னிகல் இயக்குநராகவும் சௌந்தர்யா ரஜினி பணியாற்றுகிறார்.

ரஜினிக்கு ராசியான ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் ராணா பூஜை நடந்தது. அங்கேயே முதல் காட்சியும் படமாக்கப்பட்டது. ரஜினி – தீபிகா பங்கேற்கும் டூயட் பாடல் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்குச் விரைவில் செல்கிறார்கள்.

இந்தப் படத்தில் மொத்தம் 7 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவர்களில் மூவர் ரஜினிக்கு ஜோடி. மற்றவர்களுக்கு முக்கிய வேடங்கள் தரப்பட உள்ளன.

0 comments:

Post a Comment